அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஒட்டு
உன்னைப் போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இல்லை அம்மா
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஒட்டு
உன்னைப் போன்ற நல்லாள்
ஊரில் யாவர் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இல்லை அம்மா
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
